தினம் தினம் நான் சாகிறேன் பயத்தினிலே வாழ்கிறேன் வலியுடன் நான் போகிறேன் இருள் மட்டுமே பார்க்கிறேன் எங்கே போனால் என் நோய் போகும் அங்கே போகும் பாதை வேண்டும் எங்கே போனால் கண்கள் தூங்கும் அங்கே வாழும் வாழ்க்கை வேண்டும் தினம் தினம் நான் சாகிறேன் பயத்தினிலே வாழ்கிறேன் வலியுடன் நான் போகிறேன் இருள் மட்டுமே பார்க்கிறேன் ·· இசை ·· ஏன் நான் பிறந்தேன் ஏன் நான் வாழ்கிறேன் வாழ்வே சுமயாய் நான் சுமக்கிறேன் யார் நான் மறந்தேன் வேர் நான் இழக்கிறேன் தீயில் புழுவாய் நான் துடிக்கிறேன் என் பெயரே மறந்ததே எவர் முகமே கிடைத்ததே நொடிகள் என்னை வதைக்குதே எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த தினம் தினம் நான் சாகிறேன் பயத்தினிலே வாழ்கிறேன் வலியுடன் நான் போகிறேன் இருள் மட்டுமே பார்க்கிறேன் ·· இசை ·· மழையினில் நனைந்தேன் இடியாய் விழுந்தது எத்தனை முறை தான் நான் சாவது கனவாய் வாழ்க்கை கலைந்தால் நல்லது போதும் உலகில் நான் வாழ்வது அழுதிடவே நீர் இல்லை அடித்திடு நீ வலியில்லை இருந்திட நான் இடம் இல்லை எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த